மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் நாயகன் ஆதவன்.அந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள் கிடையாது மருத்துவ வசதியும் கிடையாது.
ஒரேநேரத்தில் கணவன் மனைவி ஆகியோருக்கு உயிர் போகும் ஆபத்து.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கிறது படம்.
நாயகனாக நடித்திருக்கும் ஆதவன், அந்த வேடத்துக்குப் பக்காவாகப் பொருந்தியிருக்கிறார்.அவருடைய நடிப்பும் துடிப்பும் அம்மக்களின் துயர்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன.
நாயகி ஷீலாவுக்கு இந்தப்படத்தில் அமைந்திருக்கும் கதாபாத்திரமும் அதில் அவருடைய சிறப்பான நடிப்பும் நெஞ்சை நடுங்கச் செய்யும் வண்ணம் அமைந்திருக்கிறது.
வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத்,முதன்மை மருத்துவராக நடித்திருக்கும் காயத்ரி, பயிற்சி மருத்துவராக வரும் ஜாக்குலின், கடுக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் மோகன்,அஞ்சல்காரராக நடித்திருக்கும் உமர் ஃபரூக் மற்றும் தர்மதுரை ஜீவா ஆகியோரும் அளவாக நடித்து படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.
மலைகிராம அழகையும் அந்த மக்கள் படும்பாடுகளையும் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஹரி குமரன்,கதைக்களத்தை முழுமையாக உள்வாங்கி அதை மக்களிடம் முழுமையாகக் கொண்டெ சேர்க்கும் வண்ணம் செயல்பட்டிருக்கிறார்.
இயக்குநர் தமிழ் தயாளன், எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களமும் அதை வெளிப்படுத்திய விதமும் அதற்குக் காரணமானவர்களை அம்பலப்படுத்தியதும் வரவேற்புக்குரியன.