நளினி நாயகியாக தொடர்ந்து நடிக்க உதவிய டி.ராஜேந்தர்

ராஜேந்தர் இயக்​கத்​தில் நளினி நாயகி​யாக அறி​முகமான படம், ‘உயிருள்ளவரை உஷா’. கங்​கா, ராதா ரவி, எஸ்​.எஸ்​.சந்​திரன், கவுண்​டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்​தனர். 1983-ம் ஆண்டு வெளி​யான இப்​படம் சூப்பர் ஹிட்​டானது.படத்​தில் இடம் பெற்ற இந்​திரலோகத்து சுந்​தரி, வைகைகரை காற்றே நில்​லு, இதயமதை கோவிலென்றேன் உள்பட அனைத்து பாடல்​களும் வெற்​றி​பெற்​றன. இந்​நிலை​யில், இப்​படம் 43 வருடங்​களுக்​குப் பிறகு 4கே டிஜிட்​டல் தொழில்நுட்​பத்​தில் பிப்.13-ம் தேதி மீண்​டும் ரிலீஸ் ஆகிறது. இதற்​கான விழா சென்​னை​யில் நடை​பெற்​றது..தயாரிப்​பாளர் கலைப்​புலி எஸ்​.​தாணு, இயக்​குநர் விக்ரமன், ஆர்​.கே.செல்​வ​மணி, ராதா​ர​வி, நளினி ஆகியோர் கலந்து கொண்​டனர். விழா​வில் டி.​ராஜேந்​தர் பேசும்​போது, “இப்​படத்​தின் படப்​பிடிப்பை முடித்​து​விட்டு ஒரிஜினல் காப்​பியை பைனான்​சி​யர்​களுக்கு போட்டு காண்​பித்​தேன்.

ஜெமினி லேபில் படத்​தைப் பார்த்து விட்​டு, நளினி, கதா​நாயகி​யாக சரி​யாக வரமாட்​டார்; அவருக்கு ‘நீட்டு முகம்’ என்று அவரை மாற்​றச் சொன்​னார்​கள். ஆனால், அவரை கதா​நாயகி​யாக்கி படம் எடுத்​தேன். 4 ஆயிரம் அடி பிலிம் வாங்​கி, நீட்டு முகம் என்ற சொன்​னவர்​களிடம் அவரை ‘நீட்’ முக​மாக மாற்​றினேன். நளினி​யின் தலை​முடியை விரித்​துப் போட வைத்​து, பேக் லைட்​டில் வைத்து படமாக்கினேன்.அந்த பேக் லைட் தான் என் கதா​நாயகி​யின் ஹைலைட். பிறகு அவர்​களுக்கு மீண்​டும் படம் போட்​டுக் காண்பித்தேன். படத்​தைப் பார்த்து விட்​டு, நீட்டு முகம் என்று யார் சொன்​னார்​களோ, அவர்​களே கைதட்டினார்கள்.

இதை என் திறமைக்​காகவோ, என் தலைக் கணத்துக்காகவோ சொல்​ல​வில்​லை. வாழ்க்​கை​யில் யார், எப்​போது, எப்​படி வரு​வார்​கள் என்​பது யாருக்​கும் தெரியாது, ஆண்​ட​வனுக்​குத்​தான் தெரி​யும் என்​ப​தற்​காகத்​தான் சொல்​கிறேன்” என்​றார்.