பைக்கர் – திரைப்பட விமர்சனம்

மோட்டார் சைக்கிள் என்று சொல்லப்படும் பைக்ரேஸ் குறித்த முழுமையான படங்கள் இந்தியாவில் இதுவரை எந்த மொழியிலும்

தயாரிக்கப்பட்டது இல்லை. அந்த குறையைப் போக்கும் விதமாக தெலுங்கில் வந்திருக்கும் படம் பைக்கர்.

தமிழ்த்திரைப்பட ரசிகர்கள் மறக்கமுடியாத இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் பைக் ரேஸ்பந்தய வீரர்.தன்னைப் போல் தன் மகன் சர்வானந்த்தும் வரவேண்டுமென விரும்புகிறார்.சர்வானந்த்தும் அப்படியே செய்கிறார்.அதனால் அவரை உலகஅளவில் கொண்டுசேர்க்க முயலும் நேரத்தில் எதிர்பாராவிதமாக அப்பாவை ஏமாற்றிவிட்டு விலகிச் செல்கிறார்.அதனால் டாக்டர் ராஜசேகருக்கு பெரும் அவமானம்,துரோகிப் பட்டம்,தொடர்ந்து அந்தத் துறையில் இயங்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

அதன்பின் சர்வானந்த் என்ன செய்கிறார்?அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறது இந்தப்படம்.

நாயகன் சர்வானந்த், பைக்ரேஸ் பந்தய வீரராகவே தோன்றவேண்டும் என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.

இஇரண்டுவிதமான தோற்றங்களில் வந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டியிருக்கிறார்.

நாயகி மாளவிகா நாயர்,கவர்ச்சி ஆட்டம் போட்டு இளைஞர்களை ஈர்க்கும் அதேவேளையில் அன்பானகாதலிபொறுப்பான

மனைவி ஆகியனவற்றைச் சரியாகச் செய்திருக்கிறார்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு நாயகனின் தந்தையாக திரையில் தோன்றும் டாக்டர் ராஜசேகர்,இன்றும் அதே மிடுக்கோடு இருக்கிறார்.

மகனால் பெருமிதம் மற்றும் பெரும் அவமானம் ஆகியனவற்றைச் சந்திக்கும் நேரங்களில் அவருடைய நடிப்பில் அனுபவம் தெரிகிறது.

விளையாட்டுகளையும் வியாபாரமாக்கும் தொழிலதிபர்களை நினைவுபடுத்தும் விதமாக நடித்திருக்கிறார் அதுல் குல்கர்னி.

ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ்,

பைக் ரேஸ்காட்சிகளை மயிர்க்கூச்செரியும் வண்ணம் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.பாடல்காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்,இளமைதுள்ளும் இசையை கொடுத்திருக்கிறார். எடிட்டர்

 அனில்குமார்பலாசா, படத்தை
விறுவிறுப்பாகப் பார்க்க வைக்கும் திரைக்கதையை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறார்.

அபிலாஷ் ரெட்டி, எம்.வி.எஸ்.பரத்வாஜ், ஷ்ரவன் மடலா ஆகியோர் கதை மற்றும் திரைக்கதை, பைக் ரேஸ் பயணக்கதையை மட்டும் சொல்லாமல் அதற்குள் ஓர் ஆழமான உறவுச்சிக்கல்களையும் கலந்து சுவையான கதையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

எழுத்தில் இருக்கும் பிரமிப்பை காட்சிகளிலும் அப்படியே கொடுத்து சுவாரசியமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி.