நடிகர் விஜய்யின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளுக்கு ‘கிறிஸ்தவ மதமாற்றம்’ தான் காரணம் என்ற கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நெய்வேலியில் மாஸ்டர் படத்தில் நடித்துவரும் நடிகர் விஜய், வருமான வரித் துறை சோதனைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். 23 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், ‘ஜேப்பியாரின் மகள் ரெஜினா, தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக உள்ளார். சில கிறிஸ்தவ மத குருக்களின் உதவியுடன் ஒரு மாயவலை உருவாக்கப்பட்டு விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி மற்றும் சில பிரபலங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் தயாரிப்புக்குத் தேவைப்பட்ட மொத்த பணமும் ரெஜினாவால் வழங்கப்பட்டது. ஆனால் அந்த உண்மையை மறைக்கும் விதமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டது.
அதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதி “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா…” என்று பதிவிட்டுள்ளார்.