அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கே.எம்.ரியாஷ் படத்தொகுப்பு செய்ய, சீனிவாசன் சங்கர் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். நைஃப் நரேன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். கபிலன் அம்ற்றும் கானா சல்லு பாடல்கள் எழுத, நிசார் கான் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில்
இன்று தமிழ் சினிமாவில் 10 ஹீரோக்கள் மட்டும் தான் இருப்பார்கள், அவர்கள் 100 கோடி, 200 கோடி என்று சம்பவளம் வாங்குகிறார்கள். ஆனால், சினிமாவில் ஆயிரக்கணக்கான ஹீரோ, இயக்குநர்கள் இருக்கிறார்கள், அவர்களை நமக்கு தெரியாது, தெரிந்தது எல்லாம் 10 பேரை தான். எனவே ரசிகர்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன், நீங்கள் சினிமா ரசிகர்களாக இருக்க வேண்டும், தனிப்பட்ட மனிதரின் ரசிகராக இருக்க கூடாது. புதிய முயற்சிகளையும், வித்தியாசமான கதைகளையும் ரசிக்கும் சினிமா ரசிகர்களாக மட்டுமே மக்கள் இருக்க வேண்டும். கேரளாவில் சிறு சிறு விசயங்களை வைத்துக் கொண்டு அதை அழகாக சொல்லி வெற்றி பெறுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் நான்கு பாடல், மூன்று சண்டைக்காட்சிகள் என்று இன்னமும் முழுக்க முழுக்க கமர்ஷியலாக தான் எடுக்க வேண்டி இருக்கிறது. எனவே, ரசிகர்கள் அனைத்து படங்களையும் பார்க்க வேண்டும், புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல படங்கள் வரும். எனவே, சின்ன படங்களுக்கு, நல்ல படங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க. இந்த ‘கஜானா’ படத்தின் மூலம் படக்குழுவின் கஜானா நிரம்ப வேண்டும், என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், “கஜானா மிக அழகான தலைப்பு, ரொம்ப பாசிட்டிவான தலைப்பு. இசையமைப்பாளர் அச்சுவின் பணி சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சாம் அதிகம் பேச மாட்டார். இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு ரொம்ப சாதாரணமாக இருக்கிறார். நான் இந்த படத்தை பார்த்தேன், மிக சிறப்பாக இருக்கிறது. படம் எடுப்பது கஷ்ட்டம் இல்லை, ஆனால் படத்தை ரிலீஸ் செய்வதில் தான் பாதி உயிர் போய்ட்டு வந்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலையில், இந்த படத்தை இவ்வளவு பெரிய அளவில் வெளியிடும் திருமலைக்கு வாழ்த்துகள், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். படம் நன்றாக வந்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் சப்போர்ட் பண்ண வேண்டும், நன்றி.” என்றார்.
இயக்குநர் நடிகர் வேலு பிரபாகரன் பேசுகையில், “இந்த படத்தில் சிறு வேடம் ஒன்றில் நான் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் இயக்குநர் சாம் என்னுடைய 20 ஆண்டுகால நண்பர். சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும், சினிமாவை நேசிக்கின்ற ஒரு மனிதர். திரைப்படத்தை பொறுத்தவரை உலக சினிமா மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்திருக்கிறது. கேமரா உள்ளிட்ட அனைத்து விசயங்களிலும் பல முன்னேற்றங்களை உலக நாடுகள் சினிமாத்துறையில் அடைந்திருக்கிறது. இவ்வளவு வளர்ச்சிகள் சினிமாவில் வந்திருந்தாலும், அதில் நம் பங்கு இல்லை என்பது வெட்கமான விசயம். பிற நாடுகளில் கண்டுபிடிப்பதை காப்பியடித்து தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அதில் நாம் எதையும் செய்யவில்லை. பெரிய பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்திருக்கும் நாம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமல் இருக்கிறோம். இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் இதுபோன்ற விசயங்களில் தலையிட வேண்டும். ஆனால், அவர்களது வேலை பஞ்சாயத்து செய்வதாக மட்டுமே இருக்கிறது. அப்படி இல்லாமல், தயாரிப்பாளர்கள் எவ்வளவு நஷ்ட்டம் அடைந்திருக்கிறார்கள், படங்கள் ஏன் தோல்வி அடைகிறது, உள்ளிட்ட விசயங்கள் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசிக்க வேண்டும், ஆனால் அதற்கான நபர்கள் இங்கு இல்லை. கட்ட பஞ்சாயத்து பண்றதும், யார் தலைவராக வர வேண்டும் என்பதும் தான் இருக்கிறது. நம்ம ஊரில் இருக்கும் நடிகர்களுக்கு நடிக்கவே தெரியாது. கதாநாயகர்களுக்கே நடிக்க தெரியவில்லை. சிவாஜி, எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் இருந்த கட்டமைப்பு கூட இன்று இல்லை.
எனக்கு ஃபேண்டஸி படங்கள் மிகவும் பிடிக்கும். நான் பல படங்கள் பார்த்திருக்கிறேன், ஆனால் நான் பார்க்காத பல விசயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. நாம் இதுவரை கற்பனையில் மட்டுமே பார்த்த விலங்குகளை இந்த படத்தின் மூலம் நம் கண்முன் நிறுத்த சாம் முயற்சித்திருக்கிறார். படம் மிக பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும், சாம் அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட படங்களை எடுப்பார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.
நடிகை சாந்தினி பேசுகையில்,