நாற்பது வயது பெண்ணின் குழந்தை கனவு, கரு உருவாக ஏற்படும் சிக்கல், அதனால் கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்னைகள், சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகள் கடைசியில் குழந்தை பிறந்ததா என்பது நல்ல கரு. ஆனால், அதில் அடல்ட் கன்டன்டை கலந்து கொடுத்து இருப்பதால் கதை வேறு மாதிரி செல்கிறது.
அம்மாவாகும் ஏக்கம், அதற்காக போடும் திட்டங்கள், கணவருடன் சண்டை, ரொமான்ஸ் காட்சிகளில் வனிதா நடிப்பும் ஓகே. என்ன, கதை நாயகியாக நடிப்பதால் வெயிட் குறைத்து, அதற்கேற்ப காஸ்ட்யூமுடன் நடித்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். குளோசப் காட்சிகளில பயமுறுத்துகிறார்.
பாங்காக், சித்துார் என 2 இடங்களில் கதை நடக்கிறது. பாங்காக் காட்சி ஆறுதல் என்றால், சித்துார் காட்சிகள் ரொம்பவே கொடுரமானது.
இவர்களுக்கு இடையில் டாக்டர் சீனிவாசன் அவ்வப்போது வந்து இம்சை கொடுக்கிறார். அவரை நடிக்க வைத்தது ஏன் என்றே புரியவில்லை. வனிதா உறவினராக வரும் ஸ்ரீமன் நடித்து தள்ளுகிறார். இதில் அந்த கால ஷகிலா சம்பந்தப்பட்ட காட்சிகள் வேறு.படத்தில் எடிட்டர் ஒருவர் இருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு தேவையில்லாத சீன்கள் நிறைய. இந்த கதைக்கு அடல்ட் கன்டன்ட் திணிப்பு ஏன், அப்படியே யோசித்து இருந்தாலும் அதை வேறு மாதிரி கொடுத்து இருந்தால் ஓரளவு ரசித்து இருக்கலாம். ரொம்பவே ராவாக கொடுத்து பெண்களை திட்ட வைக்கிறார். ஆண்களை வெறுப்பேற்றுகிறார் வனிதா.