குபேரபுரம் என்ற தங்கம் நிறைந்த கிராமத்திற்கு அயான் வருகிறார். அங்கு இயற்கையை நேசிக்கும் கவுரியுடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதே சமயம் பழைய சுரங்கம் மூடப்பட்ட நிலையில், புதிய சுரங்கத்தை வைத்து நைஜீரிய தொழிலதிபருடன் ஒப்பந்தம் போடுகிறார் ஷாலினி கொண்டேபூடி. ஆனால், அவரோ இன்னொரு பார்ட்னர் அல்லது அவரது வாரிசு வந்தால்தான் ஒப்பந்தம் செய்துகொள்வேன் என்று கூறுகிறார்.
இந்தசமயம் தங்கச்சுரங்கத்தில் தனது அப்பாவிற்கும் பங்கு உள்ளது என்று கூறும் அயான், தற்போதைய சுரங்கத்தில் தங்கம் இல்லை என்கிற உண்மையை போட்டுடைக்கிறார். அதன்பின்னர் கவுரி நேசிக்கும் மரத்துக்கு கீழே தங்கம் இருப்பதாக நம்பும் கும்பல், அந்த மரத்தை வெட்டி சாய்க்கிறது. சோகம் கொண்ட கவுரி கடவுளை வேண்டுகிறார். கிராம மக்களை சபிக்குமாறு கோரிக்கை விடுகிறார். அதன் பிறகு கிராம மக்கள் அனைவரும் பேசினால் பாடலாக தான் கேட்கிறது. அதாவது எதை பேசினாலும் பாடலாக அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். கிராம மக்களின் சாபம் எப்படி நீங்கியது? என்பதே மீதிக்கதை.
அயான், கவுரி ஜோடி சண்டை கோழியாக இருந்தாலும், ஒருகட்டத்தில் அன்பில் கைகோர்க்கிறார்கள். அழுத்தமான நடிப்பாலும் கலங்கடிக்கிறார்கள். கவுரியின் நடிப்பு அபாரம்.