தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும்வெளியாகும்படங்களில் வணிகரீதியாக வெற்றிபெற்றாலும் இல்லை என்றாலும் தமிழ் சினிமா தவிர்க்க முடியாத படங்கள் என எல்லா வருடங்களிலும் ஒரு பட்டியல் இருக்கும் அந்த வரிசையில் இந்த வருடம் செல்பி, டாணாக்காரன் படங்களை தொடர்ந்து” பயணிகள் கவனத்திற்கு” படம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் அரசியல், சினிமா, இயற்கை பாதுகாப்பு என மற்ற மாநில மக்களிடம் இருந்து மாற்றி யோசிப்பதுடன் அதனை சாதித்தும் காட்டுவார்கள் கேரள மக்கள் அதனால்தான் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசை விமர்சனம் செய்யும் அரசியல் சினிமா, யதார்த்த சினிமாக்களை உயிர்ப்புடன் வழங்கி தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது மலையாள திரையுலகம் அங்கிருந்துதான் பல்வேறு படங்கள் பிறமொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது
இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் எதையும் தீர விசாரிக்காமல் எதிர்விளைவுகளை பற்றி யோசிக்காமல கண்ணால் பார்ப்பதை வைத்து உடனடியாக பதிவிடும் ஆர்வக் கோளாறுகளால் சம்பந்தப்பட்டவர்கள்எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் உயிரோட்டமாய் சமரசமின்றி பதிவு செய்திருக்கும்படம் “பயணிகள் கவனத்திற்கு”
இந்திய சினிமாவில் யதார்த்தக் கதைகளத்தில் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து வெற்றிபெறுவதில் முதலிடம்மலையாளத் திரையுலகத்திற்கு உண்டு. இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா? அதனை திரைப்படமாக தயாரிக்க இயலுமாஎன்று கேட்கத் தோன்றும். அப்படி ஒருபடம்தான் ‘விக்ரிதி’. மலையாளப் படத்தின் உயிரோட்டத்தை அப்படியே தமிழில் பயணிகள் கவனத்திற்கு படத்தில் பதிவுசெய்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல். இந்தப் படத்தில் நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். காது கேட்காது,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான விதார்த் ஒரு கல்லூரியில் நூலகராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியான லட்சுமி சந்திரமெளலியும் இவரைப் போலவே மாற்றுத் திறனாளிதான்.
வைரலாகிறது. விதார்த் குடித்துவிட்டு மெட்ரோ ரயிலில் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் படுத்திருந்ததாகச் சொல்லி அவரைக் கடுமையாகத் திட்டியும், விமர்சித்தும், கண்டித்தும் கமெண்ட்டுகள்சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய தொலைக்காட்சி தலைப்புச் செய்தியாக மாறுகிறார் அந்த பதிவின் உண்மை தன்மை பற்றி அறிய யாரும் முயற்சிக்கவில்லை
படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும்தங்களது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை குறையின்றி வழங்கி இருக்கிறார்கள்காவல்துறை அதிகாரிபிரேமின் கதாபாத்திரம் வித்தியாசமானது