தமிழ் சினிமாவும் – தமிழக அரசியலும் 1957 முதல் பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பதை போன்றுதான் சினிமா மூலம் அரசியல் வளர்ச்சியா அரசியல் மூலம் சினிமா வளர்ச்சியா என்பதற்கு தெளிவான விடை இங்கு காணமுடியாது அரசியல்வாதியாக இருந்த மு. கருணாநிதி திமுகவின் கொள்கைகளை திரைமொழி மூலம் மக்களிடம் அடர்த்தியாக கொண்டு சென்றார் இதற்கு சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமசந்திரன் இருவர் நடித்த படங்களை முழுமையாக பயன்படுத்தினார் நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல்களில் பெயரளவில் சிலருக்கு போட்டியிடவும் வாய்ப்புகளை திமுக வழங்கியது அப்படித்தான் 1962 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் , எம்.ஜி.ராமசந்திரன் ஆகியோர் 1962 முதல்தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்றனர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை தொடங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார் ஆனால் தன் வளர்ச்சிக்கு காரணமான திரைத்துறையில் இருந்து நடிகர்களை ஊக்குவிக்கவில்லை 1980ல் ஆண்டிபட்டியில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் திமுக தலைமை கட்சிக்கு நீண்டகாலமாக விசுவாசமாக இருந்த பசையுள்ள நபர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது அந்த வகையில் T.ராஜேந்தர், தயாரிப்பாளர் ராம நாராயணன் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது கடுமையான அரசியல் பணி, ஆட்சி பணிகளுக்கு இடையில் இளைப்பாறும் நந்தவனமாக மட்டுமே திரைத்துறையை மு. கருணாநிதி இறுதி வரை பயன்படுத்திகொண்டார் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் சினிமா கலைஞர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்திகொண்டார்கள் அவர்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் அங்கீகாரத்தை இருவரும் வழங்கவில்லை 2005ல் தனிக்கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த்திரைப்பட நட்சத்திரங்களை கட்சிக்குள் கொண்டுவரவில்லை அவரது அரசியல் பிரவேசத்திற்கு பின்னரே 2010ல் இயக்குனர் சீமான் நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவித்து தேர்தல் அரசியலில் ஈடுபட்டார் அந்த கட்சியிலும் சினிமா கலைஞர்கள் அதிகம் பங்கேற்கவில்லை2018 ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை கமலஹாசன் தொடங்கி நடத்திவந்தாலும் அக்கட்சி சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தலில் திரைப்பட துறையினருக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்கி இருக்கின்றனர்

