ஆன்மீகம் பேசும் செல்வராகவன்

சென்னை அசோக்நகர்அரசு மேல்நிலை பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மிக உரையாற்றி அது பெரும் சர்ச்சையாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு  பதிலடி கொடுத்துள்ளாரா செல்வராகவன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு.இயக்குநர் செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் தீவிரமான ஈடுபாடு உள்ளவர் இல்லை. எப்போதாவது சினிமா, ஆன்மீகம், அரசியல் பற்றி தனது கருத்துக்களை வெளியிடுவார். கடந்த ஒரு வாரகாலமாக தமிழ்நாட்டு அரசியலில், சமூகவலைதளங்களில் விவாத பொருளாக  ஆன்மீக சொற்பழிவாளராக வலம் வந்த மகாவிஷ்ணு இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆன்மீகம் பற்றிய பதிவு ஒன்றை இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,
 “என்னங்க இது.. யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு நான் ஆன்மிக குரு என்று பேசினால் கண்டதை எல்லாம் பேசிக்கொண்டு உடனே நீங்கள் ஒப்புக்கொண்டு பெட்ஷிட் எல்லாம் எடுத்து கொண்டு நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு போய் உட்கார்ந்து கேட்பீர்களா.
உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை. அவரே உங்களை தேடி வருவார். உங்களுடைய சந்திப்பு தானாக நடக்கும். டிவியில் விளம்பரம் செய்து கொண்டு, மைக் எல்லாம் வைத்து கொண்டு யாரும் இருப்பது இல்லை. உண்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்தி கொள்ளவே மாட்டார்.

முதலில் ஒன்றை சொல்லி கொள்கிறேன். தியானம் தான் உலகத்திலேயே மிகவும் எளிமையான விஷயம். உலகில் உள்ள எல்லா மதங்களும் போதிக்கிறது.. கடவுள் உங்களிடம் இருக்கிறான் என்பதை தான். இதற்கு புத்தர் சொல்லும் தியானம் தான் ஈஸியான வழி. நாசில் (மூக்கில் இருக்கும் துளைகள்) என்று சொல்வோம். அது காற்று செல்லும் இடமாகும். அதில் நினைப்பை வையுங்க. மூச்சு விடுவது, மூச்சு இழுக்கிறது பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. அது எல்லாம் தன்னாலே நடக்கும்.
இடையில் வேறு ஏதேனும் நினைப்பு எல்லாம் வந்தால் அதனை அடக்க வேண்டும் என்று நினைக்காதீங்க.. அந்த நினைப்பு எல்லாம் தன்னாலே வரும். சிறிது நேரத்தில் தன்னாலே சென்றுவிடும். அப்புறம் மனசை நீங்க மீண்டும் கொண்டு வாங்க. புத்தர் வந்து இதை தான் சொல்கிறார். நீங்கள் நீச்சல் அடித்து கொண்டே இருந்தால் உங்களுக்கு நீச்சல் நன்றாக வந்துவிடும். இதற்கு மாற்று கருத்து ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். நான் கேட்டு கொள்கிறேன். ஆனால் மாற்றுக்கருத்து என்பது எதுவும் இல்லை” என்று அதில் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.