பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன் ஆகிய மூன்று நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். படத்துக்கு நாயகிகள் தேவை என்பதற்காக இல்லாமல் கதைக்கு, அது சொல்லும் வலிமையான கருத்துக்கு நாயகிகளாக இருக்கிறார்கள்.
கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் பாத்திரப்படைப்பும் அவர் நடிப்பும் இரண்டாம்பாகத்திற்கான முன்னோட்டம்.மற்றும்
இளங்கோ குமரவேல், காளி வெங்கட், வினோத் கிஷன், அப்துல் லீ, ஜான் கொக்கன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளார்.
சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் அனல் காட்சிகளிலும் தெறிக்கிறது.
நீ யாரு? உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும் என்பது உள்ளிட்ட அழுத்தமும் ஆழமுமான வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
மண்விடுதலை, பெண்விடுதலை மற்றும் சாதீய விடுதலை ஆகியனவற்றை இரத்தம் தெறிக்கத் தெறிக்கப் பேசியிருக்கிறார் இயக்குநர் அருண்மாதேஸ்வரன்.
அவற்றைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கும் உத்தி தமிழ் சினிமாவிற்கு புதியது மட்டுமல்லரவேற்புக்குரியதும் கூட.