கமல்ஹாசன் வளர்ப்பு மகனாக நடித்திருக்கும் சிலம்பரசன்,துள்ளலும் துடிப்புமாக நெருப்பு போல் இருக்கிறார். கமல்ஹாசனை விஞ்சுமளவுக்கு நடித்திருக்கிறார்.
கமல்ஹாசன் மனைவியாக நடித்திருக்கும் அபிராமியின் பாத்திரப்படைப்பும் அதில் அவர் நடிப்பும் வரவேற்பையும் பரிதாபத்தையும் சம்பாதித்துக் கொடுக்கிறது.
த்ரிஷாவின் கதாபாத்திரம் இளைஞர்களுக்காக வலிந்து உருவாக்கப்பட்டது போன்றே தெரிகிறது. அதுவே படத்திற்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கிறது.
கமலின் அண்ணனாக நடித்திருக்கும் நாசர்,மகேஷ்மஞ்ச்ரேகர், ஜோஜுஜார்ஜ்,அசோக்செல்வன்,
ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகள் நல்லனுபவம் தரக்கூடியவையாக அமைந்திருக்கின்றன.நவீன தொழில்நுட்ப உதவியால் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் நன்று.
கமல்ஹாசன் இளவயது சிலம்பரசன் சிறுவயதில் படம் தொடங்குகிறது.அஞ்சுவண்ண பூவே பாடல் இதமாக இருக்கிறது. அதனால் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சொல்லும் என எதிர்பார்த்தால் ஆனால் அம்மாதிரி நடக்காமல் நேரெதிர்த் திசையில் பயணிக்கிறது.
உணர்வுப்பூர்வமான கதைசொல்ல முயன்றிருக்கிறார்கள். மணிரத்னம் கமல்ஹாசன் ஆனால் முழுமையடையவில்லை.