பழங்குடியினர் வாழ்க்கையை பேசும் அலங்கு

டி.ஜி.பிலிம் கம்பெனி மற்றும் மேக்னாஸ் புராடக்ஷன்ஸ்இணைந்து தயாரித்துள்ள ஆக்க்ஷன் திரைப்படம் “அலங்கு”  விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
படத்தின் முதல் பிரதியை பார்த்து ரசித்து உலகம் முழுவதும் வெளியிடும் உரிமைகளை வாங்கி இருக்கிறது சக்தி பிலிம் பேக்டரி என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து , மாறுபட்ட கதைக்களம்  கொண்ட பல திரைப்படங்கள் அவ்வபோது வெற்றிபெறுவது வழக்கம் , இவ்வருடமும் அதைபோல பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில்  “அலங்கு “ திரைப்படமும் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை  S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். குணாநிதி, , காளிவெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் SP. சக்திவேல்.
இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர்.  இவர்களுடன் நாய் ஒன்றும்  ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறது.
இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் எஸ்.பி.சக்தி வேல்கூறுகையில்,
நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக  மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே  திரைக்கதையின் பிரதானம்.
படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே  படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படி படம் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த “செல்ஃபி” திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது