டிஜிட்டல் சினிமா முன்னோடி சிலந்தி வெளியான நாள்

தமிழ் சினிமாவில் 24,54,85,128 இந்த எண்ணிக்கையில்தான் பிரிண்டுகள் போடப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வந்தன இந்த பிரிண்டுகள் ரீலீஸ், ஷிப்டிங் என்கிற முறையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு வருட காலத்திற்குள் திரையரங்குகளில் ஓடி முடியும் இதன் காரணமாக ரீலீஸ்விநியோகஸ்தர், அவரிடம் ஷிப்டிங் முறையில் படங்களை வெளியிடும் விநியோகஸ்தர் என ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பும், தொழிலையும் ஏற்படுத்திக்கொடுத்தது பிலிமில் மட்டும்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்த காலங்களில் இன்றைக்கு ஆயிரக்கணக்கனக்கான விநியோகஸ்தர்கள் இல்லை, அவர்களுக்கான சங்கங்கள் பல மிழந்துவிட்டன குறிப்பிட்ட சிலர் மட்டுமே பட வியாபாரத்தையும், வெளியீட்டையும் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவருகின்றனர் குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியவில்லை இவை அனைத்துக்கும் காரணமாக அமைந்தது தொழில்நுட்ப வளர்ச்சியில் சினிமா தயாரிப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறியது தமிழ் சினிமாவில் இதனை தொடங்கிவைத்து , வணிகரீதியாக வெற்றியை பெற்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு நம்பிக்கையை வழங்கியது 60 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட சிலந்தி என்கிற படம் இதனை தயாரித்த, இயக்கிய இருவருக்கும் சிலந்தி தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது
சிலந்தி படம் 2008ம் ஆண்டு மே 8 ம் தேதி தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது.  இந்த வெற்றிதான்  டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்திரைப்படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுத்தது. இந்த படத்தை திருப்பூரை சேர்ந்த சங்கர் பழனிச்சாமி என்பவர்ஜி கம்பெனி சார்பில் தயாரித்திருந்தார். சினிமா பத்திரிகையாளராக “மாலை முரசு” நாளிதழில் பணியாற்றிய ஆதிராஜன்   இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்களை எழுதி இயக்குனராக அறிமுகமானார்.
 முன்னாநாயகனாகவும் , குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி பிரபலமான மோனிகா  கதாநாயகியாக நடித்திருந்தனர். மற்றும் ரியாஸ் கான், நீலிமா ராணி, சந்துரு ஆகியோரும் நடித்திருந்தனர்.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னரே  மோனிகா பல படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் உதவியாளரும்  இவன், விசில்  படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்த  பெளசியா பாத்திமா இப்படத்திற்கு ஒளிப்பதிவு  செய்தார். அழகி ஆட்டோகிராப் உட்பட  பல வெற்றிப் படங்களுக்கு பணியாற்றிய சதீஷ் குரோசோவா படத்தொகுப்பை கவனித்திருந்தார். நடனக் காட்சிகளை தீனா வடிவமைத்திருந்தார்.
முதல் டிஜிட்டல் பட அனுபவம் குறித்து கன்னடம், தமிழில் அருவா சண்டை படங்களை தற்போது இயக்கி வரும் இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்ட போது  “இந்த படத்தை எடுக்கும் போது நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. சோனி எச் டி மற்றும் பானாசோனிக் கேமராக்களில் தான் படம் பிடித்தோம். காட்சிகள் எச்டி டேபில் தான் பதிவு செய்யப்பட்டது. உச்சிவெயிலில் படப் பிடிப்பு நடத்தினால் ப்ளீச் ஆகிவிடும். அதனால் மதிய நேர படப்பிடிப்பை தவிர்த்தோம். டிஜிட்டல் கேமராவில் காட்சிகள் 25 பிரேமில் பதிவு செய்யப்படும். ஆனால் நம்மிடம் இருந்த அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் 24 பிரேமுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. 25 ப்ரேமை 24 க்கு மாற்றும்போது ‘நான் சிங்’ ஏற்படும். எல்லாத்தையும் கடந்து படத்தை முடித்தபோது பிக்சல்ஸ் அதிகமானது. இதனால் மும்பை பிரசாத் லேபிலிருந்து கலரிஸ்ட் ஒருவரை வரவழைத்து இரண்டு முறை கிரேடிங் செய்தோம். இப்படி பல சவால்களை கடந்துதான் சிலந்தி படத்தை திரைக்கு கொண்டு வந்தோம். முழுக்க முழுக்க டிஜிட்டல் தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் சுமார் 100  தியேட்டர்கள்மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களை திரையிடும்  ப்ரொஜெக்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது. என்னுடைய பத்திரிகை நண்பர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பு படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று கதை திரைக்கதை வசனம் இயக்கம் சிறப்பாக இருந்ததால் படம் வெற்றி பெற்றது.
டிஜிட்டல் படத்தை உருவாக்க வேண்டும் என்று யோசித்ததுடன் என்னை உற்சாகப்படுத்தி இயக்குனராகவும் உருவாக்கிய நண்பர், தயாரிப்பாளர் சங்கருக்கும், இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி”” என்றார்.
தயாரிப்பாளர் சங்கரிடம் பேசிய போது
60 லட்சம் ரூபாய் செலவில் 21 நாட்களில் 31 கால்ஷீட்(8 மணி நேரம் ஒரு கால்ஷீட்) நேரத்தில் படப்பிடிப்பு நடத்தி  முடிக்கப்பட்ட சிலந்தி படம் தமிழகத்தில் 35 தியேட்டர்களில் ரிலீசாகி சுமார் 3.5 கோடி வரை வசூல் செய்தது. படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே பல விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க “ரிவர்ஸ் டெலிசினி” முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இருந்த படத்தை பிலிமுக்கு மாற்றி  சென்னைபிரசாத் லேப்பில் பிரிண்டுகள் போடப்பட்டு ஐந்தாவது  வாரத்தில் பிலிமிலும் ச 100 திரையரங்குகளில்  வெளியாகி வசூலை குவித்தது. ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரியும் சிலந்தி படத்தின் உருவாக்கத்தையும் வெற்றியையும் வசூலையும் கவனித்துக் கொண்டே இருந்தனர். சிலந்தி படத்தின் வெற்றி டிஜிடல் சினிமா மீதான நம்பிக்கையை அனைவருக்கும் அதிகப்படுத்தியது. இந்த படம் இந்தி தெலுங்கு போஜ்புரி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. அதன்பிறகுதான் 5டி, ரெட் ஒன் என்று பல டிஜிட்டல் கேமராக்கள் பல்வேறு மாற்றங்களுடன் வெளிவந்த இன்று அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது.எனது தயாரிப்பில் முதல் படத்தை வெற்றி படமாக்கிய இயக்குநர் ஆதிராஜனுக்கும்
கதாநாயகன் முன்னா கதாநாயகி மோனிகா மற்றும் இந்த படத்தில் பணிபுரிந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்