தமிழர் வரலாறு கூறவரும் மாவீரா

சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் இயக்குநர் கவுதமன்.
கனவே கலையாதே,மகிழ்ச்சி ஆகிய படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் மாவீரா.வி.கே புரொடக்க்ஷன் குழுமம் தயாரிக்கும் இந்த படத்தில் வ.கௌதமன் நாயகனாக நடிக்க உடன் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூரலிகான், சரண்யா பொன்வண்ணன், அஸ்வினி சந்திரசேகர், இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி, “பாகுபலி” பிரபாகர், தமிழ் கௌதமன், தீனா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வைரமுத்துபாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன் எழுதியுள்ளார்
இந்த ‘மாவீரா’ படத்தின் துவக்க விழா கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள விஜய மாநகரம் முனீஸ்வரன் கோயிலில் நேற்றுகாலை நடைபெற்றது.
தமிழர்களின் வழிபாட்டோடும், வரலாற்றோடும், வாழ்வோடும் பின்னிப் பிணைந்த தமிழ்க் கடவுள் முருகன், வள்ளலார், வள்ளுவர் ஆகியோர் படங்களுக்கு வழிபாடு செய்துபடப்பிடிப்பைதொடங்கியுள்ளார்கள்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் வ.கௌதமன் கூறுகிறபோது, “இந்தப் படம் தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்புபடுத்தி கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாக இருக்கும்.என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவதுதான். ‘சந்தனக் காட்டு மாவீரன்’ வீரப்பனை படைத்துவிட்டேன். இது முந்திரிக்காட்டில் வாழ்ந்த மாவீரர் ஒருவருடைய வாழ்க்கை வரலாறாகும். அடுத்து வன்னிக்காடு மட்டுமே மீதமுள்ளது.
‘அத்து மீறினால் யுத்தம்’ என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீர வரலாறே “மாவீரா” திரைப்படம். தமக்கு மேலானவர்கள் யாரும் இல்லை, கீழானவர்கள் யாரும் இல்லை என்ற சமத்துவத்தோடு எல்லா மக்களையும் சமமாக பாவித்த அதே சமயத்தில் ‘அத்துமீறி மீறினால் யுத்தம்’ என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாறு இது. தமிழினத்தை அழிக்க நினைக்கும் கூட்டங்களுக்கு இப்படைப்பு பதில் மட்டுமல்ல, மிகச் சரியான பதிலடியும் கொடுக்கும்” என்றார்.