முஸ்லிம் வீட்டில் மாரியாத்தா பாட்டு படப்பிடிப்பு நடத்திய கனல் படக்குழு

நைட்டிங்கேல் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் டி.சமய முரளி இயக்கியுள்ள படம் ‘கனல்’.
இந்தப் படத்தில் காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர், ஸ்வாதி  கிருஷ்ணன், ஜான் விஜய்  மற்றும் பலர் நடித்துள்ளனர்இப்படத்தின் இசை வெளியீட்டு விழா   சென்னபிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் இசை அமைப்பாளர் தென்மா பேசும்போது,
கானாமுத்து வழியாக இந்தப் படம் எனக்கு வந்தது. இந்தப் படத்தின் பாடல் வேலைகள்  மிகவும் சவாலாக இருந்தது. சமய முரளி சாருக்கும் எனக்கும் நல்ல நட்பு  இருந்தது. இந்தப் புது படக் குழுவிற்கு இந்தப் படம் நல்ல அடையாளத்தை கொடுக்கும். ஸ்ரீதர் மாஸ்டருக்கு நன்றி என்றார்.
நடிகை காவ்யா பெல்லு பேசியதாவது,
 ‘கனல்’ எனக்கு ரொம்பவும் பிடிச்ச படம். இதில் நான் நடிக்க மட்டும் செய்யவில்லை. புரொடக்‌ஷன் வேலையும் செய்தேன். இந்தக் கேரக்டர் நான் பண்றதுக்கு இயக்குநர் என்னைக் கேட்டார். எல்லாருக்கும் டவுட் இருந்தது. இந்தக் கேரக்டரை ரொம்ப சீரியசா எடுத்துட்டுப் பண்ணேன். ‘சக்தி’ என்ற இந்த கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான கேரக்டர்என்றார்.
நடிகர் ராதாரவி பேசும்போது,
என் சினிமா கேரியரில் நான் முதன்முதலில் கன்னட படத்தில்தான் நடித்தேன். கமல்தான் இங்கு ‘மன்மத லீலை’ படத்தில் என்னை சிக்க வைத்தார். ஸ்ரீதர் ஆடினாலே நல்லாருக்கும். அதேபோல் வேல்முருகன் மாரியாத்தாளுக்கு என்றே இருக்குற ஆள். நல்லா பாடுவார். வேல்முருகன் பாட்டு எனக்கு எப்பவுமே பிடிக்கும். வேல்முருகன் மனசுல இருந்து பாடிருக்கார். மெட்ராஸ் கானா பாடல்களை  மேடையில் அழகாக பாடிய தம்பிகளுக்கு ஹேட்ஸ் ஆப்!
கானா கும்பலோட எல்லாம் சுத்துனவன்தான் நான். ஆனால் இந்தப் பசங்க நல்லா பாடினாங்க. தென்மா எக்ஸ்லண்டா மியூசிக் பண்ணிருக்கார். சதிஷும் மியூசிக் பண்ணிருக்கான். கேமராமேன் நல்ல உழைப்பைக் கொடுத்திருக்காரசமய முரளி இந்தப் படத்தின் கதையைச் சொன்னார். அருமையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். இயக்குநர் இப்படியொரு கதையை எடுத்ததுக்கு ஹேட்ஸ் ஆப்.
சிலர் “நான் கீழ இருந்து வந்தேன். அதனால் இப்படி படம் எடுத்தேன்” என்பார்கள். ஆனால் சமய முரளி  மேலே இருந்து வந்தவர். இப்பலாம் யார், யார்லாமோ நடிக்க வந்துட்டாங்க. சனியன் நானூறு படம் நடிச்சிட்ட பிறகும் நானே சிலரிடம் “நான் நல்லா நடிப்பேன்”னு சொல்ல வேண்டியிருக்கு.
எல்லாரும் ஓடிடி ன்னு சொல்லிட்டிருக்காங்க. எல்லா பெரிய ஹீரோக்களுக்கும் சொல்றேன். இப்பகொடுப்பான் ஓடிடி. பிறகு அவனே பிக்ஸ் பண்ணுவான். படம்னா தியேட்டர்லதான் பார்க்கணும்.
இந்தக் கனல் படத்தை நான் பார்க்காமலே பேச முடியும். இயக்குநரிடம் கனலா அனலா என்ன? என்று கேட்டேன்.
நடிகை தமன்னாவைப் பார்த்தபோது நான் பெரிதும் வியந்தேன். அந்தப் பொண்ணை சுத்திச் சுத்தி வந்து பார்த்தேன். ஒரு இடமும் கருப்பும் இல்ல. இந்தப் பொண்ணு காவ்யாவும், தமன்னா போல அவ்ளோ கலரு. நல்லா நடிச்சிருக்கு பொண்ணு. நல்லாவும் தமிழ் பேசினாங்க. புரொடக்சன்ல இருந்தேன்னு சொன்னது ஆச்சர்யம்கமல் எவ்வளவு திறமைக்காரர் பாருங்க. இந்த நேரத்துலயும் நம்பர் ஒன் கலெக்‌ஷனை எடுத்தான் பாருங்க. அதான் திறமை. கீழ இருக்கவனை பத்தி படம் எடுக்குற சமய முரளி மனசுக்கு இந்தப் படம் பெரிதாக ஹிட் ஆகும்” என்றார்.
இயக்குநர் சமயமுரளி பேசியதாவது,
கீழே இருப்பவர்கள் எல்லாம் மேலே வர வேண்டும் என்பதுதான் இப்படத்தின் கரு.இந்தப் படத்தின் சார்பாக  ஒட்டு மொத்தமாக  நன்றி சொல்ல வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர். நகரில் இருக்கும் மக்களுக்குத்தான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் நகரில்  வாழும் பானு அக்கா ஒரு முஸ்லிம். ஆனால் அவர் வீட்டில்தான் ‘அய்யனார்’ பாடல் காட்சியை எடுத்தோம். பணம் மட்டும் சந்தோசம் அல்ல என்பதை எம்.ஜி.ஆர் நகர் மக்களிடம்தான் கண்டோம். அங்கு எல்லா மக்களும் சந்தோசமாக இருக்கிறார்கள்.
இந்தப் படம் எடுத்த பிறகுதான் பாட்டு வைக்கணும் என்று தோன்றியது. ‘சென்னை மண்ணு’ என்ற பாட்டை எழுதினோம். அதை கானாமுத்து அழகாக பாடியிருந்தார். தென்மாவின் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தைப் பார்த்துவிட்டு அவரை அணுகினேன். சதிஷ் சக்ரவர்த்தி,  தென்மா இருவரும் மியூசிக் பண்ணிருக்காங்க.
ஸ்வாதி நல்லா நடிச்சுக் கொடுத்தார். காவ்யா நிறைய பெண்களை நடிக்க அனுப்பினார். பின் அவரையே நடிக்கச் சொன்னேன். ஆனால் அவர் இவ்வளவு அழகாக நடிப்பார் என்று நினைக்கவில்லை. அவர் பெரிய நடிகையாக வருவார். இந்த சினிமாத் துறைக்கு வருவதற்கு என்னை அனுமதித்த என் மனைவிக்கும் நன்றி. இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு மீடியா சப்போர்ட் வேணும்” என்றார்.