அதிகம் தொடர்பு கொள்ள முடியாத மலைப்பகுதியில் காவல்துறை துணைக்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கச் செல்கிறார் அதிதிபாலன்.அவரைக் கடத்தி மறைத்துவிட்டு அந்த இடத்துக்குச் செல்கிறார் துஷாரா விஜயன்.
துஷாரா விஜயன் காவலதிகாரிக்குரிய மிடுக்கு,துணிவு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் நடிப்பிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
காவல்திகாரியாக நடித்திருக்கும் அதிதிபாலனும் குறைவில்லை.அவரும் அந்த வேடத்துக்கேற்ற அம்சங்களைச் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெயிலராக நடித்திருக்கும் அப்பாஸ் பொறுப்பாக நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் வசுந்தரா,நரேன் மணி ஆகியோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவு,
சாம்.சி.எஸ் இசை,தொடரின் தரத்தை உயர்த்திக் காட்டப் பயன்பட்டிருக்கிறது.
ஏ.ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்திருக்கிறார். முதல் மூன்று பாகங்களில் இருக்கும் விறுவிறுப்பு அடுத்த இரண்டு பாகங்களில் சற்று குறைந்துவிட்டது.
எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.சற்குணம். அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி யுபிஎஸ்சி ஆகியனவற்றில் நடக்கும் அட்டூழியங்களைச் சொல்லி அதிர வைக்கும் மையக்கருத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
காவல்துறையில் ஆள்மாறாட்டம் செய்து அதைத் தேடிப் பிடித்து வெளிப்படுத்தும் திரைக்கதை அமைத்து மர்மம் திகில் ஆகிய வகையில் அமைந்திருப்பது தொடருக்குப் பலம்.அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்புடனே வைத்திருப்பதும் இயக்குநருடைய பலம்