முன்னோட்டம் எப்படி: தொடக்கத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதைத் தடுக்க ஒரு ரகசிய உளவு நடவடிக்கை தேவை என்றும் அதிகாரிகள் விவாதிக்கின்றனர். முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில்நடக்கும் காட்சிகள் முன்னோட்டத்தில்விறுவிறுப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ‘ஒரு உயிர் கூட போகக் கூடாது’ என்ற லட்சியத்துடன் களமிறங்கி, பின்னர் ஏற்படும் இழப்புகளால் தவிக்கும் காட்சியில் கார்த்தி உணர்வுபூர்வ நடிப்பை வழங்குகிறார்.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். பின்னணி இசை வலு சேர்க்கிறது. முதல் பாகத்தை காட்டிலும் இதில் ஆக்ஷன் காட்சிகள் தரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.