இப்படத்தில் நடித்துள்ள இந்திரன்ஸ் மிகவும் திறமையானர். அவர் பல்வேறு வகையான படங்களில் நடித்து வருகிறார். அவர் மிகவும் ஊக்கமளிப்பவர். நான்காம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர் தற்போது ஏழாம் வகுப்பு தேர்வை முடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிபுக்கு எல்லையே இல்லை. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மிகவும் திறமைசாலி. உங்கள் முன்னால் ஒரு பெரிய எதிர்காலம் உள்ளது. நான் அவரை முதலில் பார்த்த போது, அவர் ஒரு நாளைக்கு 1000 டியூன்களை உருவாக்குகிறார் என்றார்கள். இந்தப் படம் திரைக்கு வரும் போது, இசை வகையில் ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்.
’கருப்பு’ படம் இவ்வளவு தூரம் வருவதற்கு கருப்புசாமி கடவுள் தான் காரணம் என நினைக்கிறேன். கடவுள் ஒருவருக்குள் வரும்போது ஏற்படும் விளைவை உண்மையில் பார்க்கிறேன். நம்பிக்கை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அதிசயம் நடக்கும்.
ஒரு படம் வந்ததால், ஆர்.ஜே.பாலாஜி அப்படிச் சொன்னார், இப்படி சொன்னார் என்பார்கள். ஆனால், அவர் உண்மையில் பன்முகத் திறமைசாலி. நான் என்னை சூர்யாவாக பார்க்கிறேன்.
ஆனால், அவர் தன்னை இயக்குநர், நடிகர், வர்ணனையாளராக பார்க்கிறேன். இந்தப் படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன்.
படம் பார்த்தவர்கள் முதல் பாதி ரொம்ப எமோஷனலாக இருக்கிறது, இரண்டாம் பாதி திரையரங்கில் கொண்டாடும் தருணங்கள் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். மே 14-ம் தேதி இப்படம் உங்கள் கையில் தான் இருக்கும். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்” என்று பேசினார் சூர்யா.