டிவிட்டர் பதிவுகளை சர்ச்சைக்குள்ளாக்க வேண்டாம் – சித்தார்த்

நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.

சித்தார்தின் டிவீட் சமந்தாவை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் சில காலம் காதலில் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் ஏற்கனவே கூறப்பட்டு வந்தது

சித்தார்த்தை விட்டு பிரிந்துசமந்தா நாகசைதன்யாவைத் காதல்திருமணம் செய்து கொண்டார்.

சித்தார்த் வெளியிட்ட அந்தப் பதிவிற்கு பல கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சித்தார்த் தன் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் நான் என் மனதில் தோன்றுவதை டிவீட் செய்கிறேன், தெருநாய்களைப் பற்றி நான் டிவீட் செய்தால், அது அவர்களுக்கானது என்று மக்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது டிவீட்களை தேவையற்ற சர்ச்சைகளுக்குள் இழுத்து பெரியதாக ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

என் வாழ்க்கையில் விரும்பாதவர்களை விட நான் என் வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். எனவே ஊடகங்களின் வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்றும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.