ரஜினிகாந்த்தின் முதல் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர் ஏற்கனவே தனுஷின் நடிப்பில் வெளியான ‘3’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதையடுத்து கௌதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார்.
தற்போது அந்த படத்தில் இரண்டு முன்னணிதெலுங்கு நடிகர்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ராம்சரண் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டால் மற்றொரு பெரிய நடிகர் மாற்றப்படுவார் என்றும், ராம் சரண் அல்லாமல் படத்தில் வருண் தேஜ் நடிப்பதாக இருந்தால் மற்றொரு பெரிய நடிகர் இணைவார் என்றும் கூறப்படுகிறது. அதற்கான பூர்வாங்கபேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது