வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்காக நடக்கும் ‘வருங்கால சூப்பர் ஸ்டார்’ ஷோவில் பங்கேற்கும் அடுத்த கட்ட போட்டியாளர்கள் 540 பேருக்கு சுசி கணேசன் வித்தியாசமான போட்டியொன்றை அறிவித்திருக்கிறார்.
விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே,கந்தசாமிஉட்பட தான் இயக்கிய ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமான கதைக் களத்தில் கொடுத்து தனது தனித்துவத்தை நிரூபித்தவர் இயக்குநர் சுசி கணேசன்.
விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே,கந்தசாமிஉட்பட தான் இயக்கிய ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமான கதைக் களத்தில் கொடுத்து தனது தனித்துவத்தை நிரூபித்தவர் இயக்குநர் சுசி கணேசன்.
இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் 2 கதாநாயகர்களில் ஒருவரை கண்டறியும் புதிய முயற்சியாக ‘வருங்கால சூப்பர் ஸ்டார்-2022’ என்கிற திட்டத்தை அறிவித்தார் சுசி.கணேசன். திரையுலகில் நுழைந்து நடிப்பில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் இத்திட்டம் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதன்படி நடிப்பில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் தங்களைப் பற்றிய அறிமுகத்தை இரண்டு நிமிட வீடியோவாக படக் குழுவுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அந்த வகையில் இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் தாங்கள் நடித்த வீடியோக்களை அனுப்பினர்.
வெளிப்படை தன்மைக்காக, அனைவருக்கும் கோட் நம்பர் கொடுக்கப்பட்டு, இணையத்தளத்தில் அனைவரது போட்டோக்களும் வெளியிடப்பட்டன. அவர்களில் இருந்து அடுத்தகட்ட தேர்வுக்கு தயாராகும்விதமாக 540 நபர்களை படக் குழு இறுதி செய்துள்ளது,
தங்களது விருப்பமான சூழ்நிலைகளை மையப்படுத்தி தங்களை பற்றிய சுய விபர வீடியோக்களை அனுப்பியிருக்கும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்தக் கட்டமாக ஒரு எழுத்துப் போட்டியை முன் வைத்துள்ளார் சுசி.கணேசன்.ஒரு காட்சியின் வசனப் பிரதி அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அந்த வசனங்களுக்கேற்றவாறு நடித்து அதை வீடியோவில் பதிவாக்கி அனுப்பி வைக்க வேண்டுமாம்.
வெளிப்படை தன்மைக்காக, அனைவருக்கும் கோட் நம்பர் கொடுக்கப்பட்டு, இணையத்தளத்தில் அனைவரது போட்டோக்களும் வெளியிடப்பட்டன. அவர்களில் இருந்து அடுத்தகட்ட தேர்வுக்கு தயாராகும்விதமாக 540 நபர்களை படக் குழு இறுதி செய்துள்ளது,
தங்களது விருப்பமான சூழ்நிலைகளை மையப்படுத்தி தங்களை பற்றிய சுய விபர வீடியோக்களை அனுப்பியிருக்கும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்தக் கட்டமாக ஒரு எழுத்துப் போட்டியை முன் வைத்துள்ளார் சுசி.கணேசன்.ஒரு காட்சியின் வசனப் பிரதி அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அந்த வசனங்களுக்கேற்றவாறு நடித்து அதை வீடியோவில் பதிவாக்கி அனுப்பி வைக்க வேண்டுமாம்.
தற்போது உக்ரைனில் நிலவும் போர் சூழல் குறித்து இந்த காட்சியின் மையக் கரு அமைந்திருக்கும். ஒரு பக்க காட்சியில் பலவேறுவிதமான உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதுபோல் இந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது .
இயக்குநர் சுசி கணேசனின் எதிர்பார்ப்பு என்ன என்பதும், ஆர்வமிக்க நடிகர்கள் அவரது எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யப் போகிறார்கள் என்பதுமான இந்த ஆடிஷன் உண்மையிலேயே தமிழ்த் திரையுலகில் புது முயற்சி என்றே சொல்லலாம்.
இயக்குநர் சுசி கணேசனின் எதிர்பார்ப்பு என்ன என்பதும், ஆர்வமிக்க நடிகர்கள் அவரது எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யப் போகிறார்கள் என்பதுமான இந்த ஆடிஷன் உண்மையிலேயே தமிழ்த் திரையுலகில் புது முயற்சி என்றே சொல்லலாம்.