கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 70 நாட்களுக்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு சின்னத்திரைபடப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படப்பிடிப்புத் தளத்தின்
இதனிடையே சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான
தற்போது இந்தப் பேச்சு தொடர்பாக குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது….
நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ்
ஊடகங்கள் மீதான என் மதிப்பு அனைவருக்கும் தெரியும. பத்திரிகையாளர்கள் (சிலர்) அதற்கு சாட்சி. திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறை கூட நான் அவர்களிடமோ, அவர்களைப் பற்றியோ நான் மரியாதைக் குறைவாகப் பேசுவதை அவர்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள். அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. ஆனால் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் யாருக்காக பணிபுரிகிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயல்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். எந்தத் தயாரிப்பாளர் இதைச் செய்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால், யாரென்று நான் சொல்ல மாட்டேன். எனது அமைதியும், மன்னிப்புமே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. நான் அதைத் தொடர்வேன்.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.