சர்ச்சை வளையத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய இ-பாஸ் எழுப்பும் கேள்விகள்
ஜூலை 19 ஆம் தேதி சமூக தளங்களில், ‘லயன் இன் லம்பார்ஹினி’ என்ற அடைமொழியோடு பகிரப்பட்டது அந்த ஒற்றைப் புகைப்படம். லம்பார்ஹினி காரில் ரஜினிகாந்த் முகக் கவசம், சீட் பெல்ட் அணிந்தபடி காரைஓட்டிக் கொண்டிருக்கிறார். ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாதான் ரஜினி வெளியே வருவார்’ என்ற விமர்சனத்தை உடைப்பதற்காக ரஜினியின் அனுமதியுடனே இந்தப் புகைப்படம் சமூக தளங்களில் வெளியிடப்பட்டது என கூறப்பட்டது மேலும், பண்ணை வீட்டில்ரஜினி நடைபயிற்சி செல்லும் வீடியோவும், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படமும் ரஜினி
இதை ரஜினி மக்கள் மன்றத்தினர் கொண்டாடிக் கொண்டிருக்க ரஜினி எதிர்ப்பாளர்களோ, ‘சரி… ரஜினி வெளியே சென்று வருகிறார். கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று வருகிறார். கேளம்பாக்கம் பண்ணை வீடு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் போனதற்காக
ரஜினி போயஸ் கார்டனில்தான் இருக்கிறார். ஆனால் சமீப நாட்களாக தினந்தோறும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று வருகிறார். அங்கே ரஜினிக்காக பிசியோதெரபி நிபுணர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள் ரஜினி குடும்பத்தார்.
ரஜினி கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு தினந்தோறும் சென்று வரலாம் என்று முடிவான பிறகு சென்னை மாநகர உளவுத்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசுவிடம் ரஜினி சார்பில் இதுபற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்தான், ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லீங்க. நானே உங்களுக்கு பாஸ் தர்றேன். இந்த பாஸ் வச்சிருந்தால் யாரும் நிறுத்த மாட்டாங்க’ என்று சொல்லி, சென்னை மாநகர காவல்துறை சார்பில் கொடுக்கப்படும் பாஸ் ஏற்பாடு செய்து அதில் தானே கையெழுத்தும் போட்டுக் கொடுத்திருக்கிறார்.