ஆல்பர்ட் திரையரங்கை முடக்கிவைத்தது மாநகராட்சி

சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் இன

 சீல் வைக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் பகுதியில் மிகவும் பிரபலமான திரையரங்கம் ஆல்பர்ட் தியேட்டர் காம்ப்ளக்ஸ். இந்தக் காம்பளக்ஸில் ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட் என்று இரண்டு திரையரங்குகள் உள்ளன. எழும்பூர் பகுதியில் இருக்கும் தியேட்டர் இது ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் தியேட்டர் நிர்வாகம் பல ஆண்டுகளாக தியேட்டருக்குரிய சொத்து வரி மற்றும் கேளிக்கை வரியை செலுத்தவில்லை.மொத்தமாக ஆல்பர்ட் திரையரங்கம் 51 லட்சத்து, 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியாகவும் 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியாகவும் செலுத்த வேண்டுமாம்.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆல்பர்ட் திரையரங்கம் வரி செலுத்தாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக நேற்று காலை அதிரடியில் இறங்கிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆல்பர்ட் திரையரங்கு வளாகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

2021-22-ம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு மார்ச் 31 அன்றுதான்கடைசி நாள் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மநகராட்சிக்கு சொத்துவரி மட்டுமின்றி இந்த திரையரங்கில் படம் திரையிட்ட விநியோகஸ்தர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு படம் ஓடி முடிந்தவுடன் பங்குத்தொகையை மொத்தமாகதருவதில்லை அதனை தவணை முறையில் கொடுப்பார்கள் அதுவும் கடந்த சில வருடங்களாக முறையாக கொடுக்காததால் கோடிக்கணக்கான ரூபாய் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கும் ஆல்பட் நிர்வாகம் பாக்கி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது