சிண்ட்ரெல்லா தலைப்புக்காக நடித்த படம்- ராய் லட்சுமி நெகிழ்ச்சி

எஸ். எஸ். ஐ புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம்  இந்தப் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையில் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர் அப்போது படத்தின் நாயகி ராய்லட்சுமி பேசுகிற போது
நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை எல்லாம் பார்க்கிறேன் ஒரு பெரிய போருக்குப் பிறகு சந்திப்பது போல் இருக்கிறது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு புன்னகையுடன் கூடிய  உங்கள் முகங்களைப் பார்க்கிறேன். இனி இது தொடரும் என்று நம்புகிறேன்.
‘சிண்ட்ரெல்லா’  ஒரு திகில் பேண்டஸி படம். இது  வித்தியாசமான ஹாரர் படம். நிறைய திகில் படங்களை நீங்களும் நானும் பார்த்திருக்கிறோம். இது வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு  வித்தியாசமாக இருக்கும்.
காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற  வெற்றிப் படங்களுக்குப் பிறகு, அதே மாதிரி படங்களாகவே எனக்கு வந்தன. ஆனால் அந்த வகை ஒரே மாதிரியான திகில் திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன்.
ஆனால் வினூ என்னை அணுகியபோது அதே வகை, என்றாலும் சிண்ட்ரெல்லா என்ற தலைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.சிண்ட்ரெல்லா என்ற அந்த ஒரு வார்த்தையில் நான் மனம் கவரப்பட்டேன்.சிண்ட்ரெல்லா என்ற பெயரை தேவதைக் கதைகளில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அந்தப் பெயரில் ஒரு திகில் படமா என்று வியந்தேன்.
ஆனால் அதையே ஒரு திகில் படமாகக் கூறினால் எப்படி இருக்கும் என்றபடி கதை சொல்ல ஆரம்பித்தார் ,மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. . இதில் இரண்டு வேடம் என்று முதலில் அவர் சொல்லவே இல்லை .ஆனால்
மூன்று வேடம் என்பது தெரியவே தெரியாது. போகப்போக ஒவ்வொரு பாத்திரமாக அவர் விளக்கினார்.
வேலைக்காரி வேடமும் நான்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொன்ன போது  நான் ஒரு கணம் தயங்கினேன். மறுத்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அவர்.என் மேல் நம்பிக்கை வைத்துப் பேசினார்.
கதையில் மனம் கவரப்பட்டு  ஒப்புக்கொண்டேன்.ஏனென்றால் அந்த அளவிற்கு அவர் என் மேல் நம்பிக்கை வைத்து அதை விவரித்தார்.
இந்தப்படம் ஒரு பிரமாண்டமான அனுபவத்தைக் கொடுத்தது.
படத்தின் பாத்திரங்களின் தோற்றம், ஒளிப்பதிவு, இசை என்று சின்னச் சின்ன வேலைகளை கூட அனைவரும் குழுவாக இணைந்து செய்தார்கள்.
படக்குழுவினரின் ஒன்றுபட்ட உழைப்பின் பலனாக இந்த படம் வந்திருக்கிறது.
சிண்ட்ரெல்லாவின் வெற்றிக்குப்பின் வினூவின் கடின உழைப்புதான் அடிப்படையாக இருக்கும் .அவர் உற்சாகமான மனிதர். இது ஒரு ஒட்டுமொத்த  குழுவினரின் படம் என்று கூட சொல்லலாம்.
சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்த சம்பந்தப்பட்ட பாத்திரம் சவாலானது. பல நேரங்களில்,அந்தக் கவுனை  அணிந்து நடிப்பது மிகவும் சிரமமாகவும் அசெளகரியமாகவும் இருந்தது.
படம் பார்க்கும்போது அந்த சிரமமெல்லாம் காணாமல் போய்விட்டது.ரோபோ சங்கருடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மறக்க முடியாதவை.பல காட்சிகளை மேம்படுத்த அவர் உதவினார். அவை ரசிக்கும்படி இருக்கும்.
இந்தப் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று இருந்தோம். அதன்படி இப்போது காலம் கை கூடி வந்துள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இயக்குநர்  வினூ பலவகை திறமைகள் கொண்ட இளைஞர். அவர் தொழில்நுட்ப ரீதியாகவும் அறிந்து வைத்துள்ளார். இசை அறிவும் கொண்டவர்.அவ்வப்போது எனக்கு கிளிப்பிங்ஸ் அனுப்புவார்.
அதைப்பார்த்த நான் ஆச்சரியப்படுவேன். புதுப் புது சிந்தனைகள் வைத்துள்ளார்.அவரது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் எண்ணி ஆச்சரியப் படுவேன்.அவருடைய கடின உழைப்பின் மூலம் அவர் எடுத்த முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் மூன்று படங்களில் பணிபுரிந்த அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது,