துல்கர் சல்மான் நடித்த படங்கள் தற்போது அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என காத்திருந்து கடந்த 2021நவம்பரில் மலையாளத்தில் தான் நடித்த குரூப் படத்தை திரையரங்குகளில் ரீலீஸ் செய்தார் நடிகர்துல்கர் சல்மான். அதேபோல தமிழில் சமீபத்தில் அவர் நடித்த ஹே சினாமிகா படமும் தியேட்டர்களில் தான் வெளியானது.இந்த நிலையில் துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் திரைப்படம் மார்ச் 18ஆம் தேதி நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறதுஆனால் துல்கர் சல்மானின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இனி அவரது படங்களை தியேட்டரில் திரையிடாமல் புறக்கணிக்க போவதாக கேரள மாநிலதியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும்,திரைப்படவினியோகஸ்தர் கள் சங்கமும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
Related Posts
கடந்த ஜனவரி மாதம் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா மூன்றாவது அலை உருவாவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்ததும், இந்த படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தார் துல்கர் சல்மான். ஆனால் இதற்காக ஏற்கனவே தியேட்டர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படாமல்அப்படியே இருந்தது தற்போது 100% பார்வையாளர்கள் அனுமதி வழங்கப்பட்டு நிலைமையும் சீராக இருக்கும் சூழலில் தங்களிடம் முறைப்படி தெரிவிக்காமல் தன்னிச்சையாக இந்த செயலை துல்கர் சல்மான் செய்துள்ளதால் அவர் நடிக்கும் படங்களை வணிகரீதியாக புறக்கணிக்கும் முடிவை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து கூட்டாக எடுத்துள்ளனர்.