நட்சத்திர நடிகர்கள், பிரம்மாண்டங்களை நம்பி படம் இயக்கும் இயக்குநர்களை நம்பி கால்ஷீட் கொடுப்பதும், முதலீடு செய்யும் திரையுலகில் கதை பிரம்மாண்டத்தை முன் வைத்து படம் இயக்கும் வாய்ப்புத் தேடும் அறிமுக இயக்குநர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைப்பது இல்லை. அவர்களுக்கு நன்நம்பிக்கை முனையாக, கதையை நம்பும் இயக்குநர் வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இவர்
முதன்முறையாக எழுதி இயக்கிய படம் லப்பர் பந்து.ஹரிஷ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ்,சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அந்தப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நட்சத்திர நடிகர்கள் நடித்த மெய்யழகன் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானபோதும் லப்பர் பந்து வசூலை குவித்து வருகிறது. குறைந்த பட்ஜெட், வியாபாரம் முக்கியத்துவம் இல்லாத நடிகர் நடிகைகள், நடிப்பில் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து நேர்த்தியானதிரைக்கதை, நுட்பமான அரசியல் வசனங்கள் மூலம் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழ்சினிமா கதாநாயகர்கள் தங்களுக்கான கதை இருக்கிறதா என தமிழரசன் பச்சமுத்துவை தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளனர். லப்பர் பந்து படம் திரையரங்குகளில் வெளியாகும்முன்பே ஓடிடி ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியவை படத்தின் பட்ஜெட் அளவிற்கு விற்பனையானது. தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையும் நல்ல தொகைக்கு விற்பனையானது. இவற்றையெல்லாம் வணிக ரீதியாக கவனித்ததமிழ்த் திரையுலகில்புதிதாக அறிமுகமாகியிருக்கும் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம், லப்பர் பந்து வெளியீட்டுக்கு முன்பே,அடுத்தபடம் எங்களுக்கு இயக்குங்கள் என்று சொல்லி தமிழரசன் பச்சமுத்துவை ஒப்பந்தம் செய்ததுடன், சம்பளத்தில்நான்கில் ஒரு பங்கு தொகையை முன்பணமாக கொடுத்துள்ளது.
படம் வெளியாகி பெரிய வெற்றி என்றதும்,அவருடைய அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.அவரு க்காகக் கதை மற்றும் திரைக்கதை எழுதும் வேலைகளில் இறங்கியிருக்கிறாராம் தமிழரசன் பச்சமுத்து.இந்நிலையில், விக்ரம் மகன் துருவ் விக்ரமும் எனக்காக ஒரு கதை எழுதுங்கள் நான் நடிக்கிறேன் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.இதனால், தமிழரசன் பச்சமுத்துவின் அடுத்த பட நாயகன் தனுஷ் அல்லது துருவ்விக்ரம் என்பது உறுதி என்கிறார்கள்.
முதன்முறையாக எழுதி இயக்கிய படம் லப்பர் பந்து.ஹரிஷ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ்,சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அந்தப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நட்சத்திர நடிகர்கள் நடித்த மெய்யழகன் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானபோதும் லப்பர் பந்து வசூலை குவித்து வருகிறது. குறைந்த பட்ஜெட், வியாபாரம் முக்கியத்துவம் இல்லாத நடிகர் நடிகைகள், நடிப்பில் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து நேர்த்தியானதிரைக்கதை, நுட்பமான அரசியல் வசனங்கள் மூலம் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழ்சினிமா கதாநாயகர்கள் தங்களுக்கான கதை இருக்கிறதா என தமிழரசன் பச்சமுத்துவை தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளனர். லப்பர் பந்து படம் திரையரங்குகளில் வெளியாகும்முன்பே ஓடிடி ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியவை படத்தின் பட்ஜெட் அளவிற்கு விற்பனையானது. தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையும் நல்ல தொகைக்கு விற்பனையானது. இவற்றையெல்லாம் வணிக ரீதியாக கவனித்ததமிழ்த் திரையுலகில்புதிதாக அறிமுகமாகியிருக்கும் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம், லப்பர் பந்து வெளியீட்டுக்கு முன்பே,அடுத்தபடம் எங்களுக்கு இயக்குங்கள் என்று சொல்லி தமிழரசன் பச்சமுத்துவை ஒப்பந்தம் செய்ததுடன், சம்பளத்தில்நான்கில் ஒரு பங்கு தொகையை முன்பணமாக கொடுத்துள்ளது.
படம் வெளியாகி பெரிய வெற்றி என்றதும்,அவருடைய அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.அவரு