அரச குடும்பத்து வாரிசுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்ததும் அவரது நண்பரும் மருத்துவருமான ஆச்சாரி அரண்மனைக்கு வருகிறார்..
அப்போது மரணப் படுக்கையில் இருக்கும் போது இதனால் வரை காத்து கிடந்த ஒரு ரகசியத்தை மருத்துவரிடம் சொல்கிறார் ராவ் பஹதூர்.. அந்த சந்தேகம் தீர்ந்தால் நான் நிம்மதியாக கண்ணை மூடி மரணம் அடைந்து விடுவேன் என்கிறார்.
தீபா பிளேஷ்பேக்கில் வந்தாலும் நம்மை நடிப்பால் ஈர்த்து விடுகிறார்..
அச்சம்மாவாக பாலா பரசர்.. காமெடியில் கலக்கி இருக்கிறார்
இவர்களுடன் ஐபிஎஸ் அதிகாரியாக ஆனந்தும் தன் பங்குக்கு நடிப்பில் கலக்கி இருக்கிறார்..
சமரன் சாயின் இசையமைக்க கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. 1960 காலகட்டங்களை ரசிகர்கள் கண் முன் நிறுத்த இவர்கள் பட்ட சிரமங்களை காட்சிகள் வெளிப்படுத்துகிறது.
கலை இயக்குநர் ரோஹன் சிங்அரண்மனை இப்படி இருந்திருக்குமோ என்று வியக்க வைக்கிறார்..
இயக்குனரான வெங்கடேஷ் மஹா படத்தொகுப்பாளராகவும் பணி செய்திருக்கிறார். எனவே காட்சிகள் தடுமாற்றமின்றி நகர்கிறது.
அரசர் குடும்பத்து கதை என்றாலும் அதை சீரியஸாக காட்டாமல், நகைச்சுவையாக திரைக்கதை அமைத்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார் இயக்குனர்..
வழக்கமான தெலுங்கு மசாலா படத்திலிருந்து ஒரு மாறுபட்ட பீரியட் டிராமா படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ் மஹா..