சென்னை மகாணம் என்று இருந்தபோதுதென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற அமைப்புசென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கியது தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழி படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்று வந்தது மொழி அடிப்படையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழிகளுக்கான சினிமா சங்கங்கள், படப்பிடிப்புகள் அந்தந்த மாநிலங்களில் செயல்பட தொடங்கியதுஆனால், தமிழில் மட்டும்தான் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என இருக்கிறது. இந்த சங்கத்தில் போட்டியிட மொழி, இனம் எப்போதும் தடையாக இருந்தது கிடையாது அரசியல்வாதிகள் ஆதிக்கமும் இருந்தது இல்லை அதேபோன்றுதான் பிற மாநிலங்களில் நடிகர் சங்க அமைப்புகள் இயங்கின ஆனால் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றிபெற முடியாத சூழ்நிலை இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது தாங்கள் நடிக்கும் படங்களில் சாதி,மொழி, இன வேறுபாட்டுக்கு எதிராக வசனம் பேசி கைதட்டல் வாங்கும் நடிகர்கள் நடிகர் சங்க தேர்தல்களில் தங்கள் மொழியினரை முன்னிறுத்தும் பழமைவாதம் பலமாகவே இன்றளவும் இருந்து வருகிறது
கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கி, மறைந்த இயக்குநர் பாலசந்தரால் டூயட் படத்தில் நடிகராக அறிமுகமானார் சினிமாவில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது தமிழ் சினிமா என்றாலும் இவரது நடிப்பு ஆளுமையை அதிகமாக பயன்படுத்திக்கொண்டது தெலுங்கு சினிமாதான்
பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்துக்களைச் சொன்னவர், சொல்லி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ் என்பதால் அவர் போட்டியிட எழுந்துள்ளஎதிர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கிறது பாஜக என்கிற விமர்சனம் கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமாவில் அதிகமாகி இருக்கிறது. ராஜசேகர் மனைவிஜீவிதாபாஜகவைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அவரை விஜயசாந்திஆதரிக்கவில்லை