தோனி, கபாலி தமிழ்படங்களில் நடித்த இந்தி நடிகை ராதிகா ஆப்தே கதாபாத்திரத்திற்காக நிர்வாணமாகவும் நடிக்க கூடிய நடிகை என்பதுடன் எதிர்மறையான விமர்சனங்கள்பற்றிகவலைப்படாதவர்
இதில் இவர்களது கோபப் பார்வையில் சிக்கிக் கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே. அவர்தான் 2016ல் இந்தியில்வெளியான Parchad என்ற படத்தில் முழு நிர்வாணமாக நடித்திருந்தார். அந்தக் காட்சி அந்தக் கதைக்குத் தேவைப்பட்டது. அதனால் நடித்தேன் என்று ராதிகா சொல்லியிருந்தார். அந்தக் காட்சியை படக் குழு வேண்டுமென்றே லீக் செய்து பரபரப்பூட்டியதாக அப்போதே புகார்கள் எழுந்தன.
ராதிகா ஆப்தே தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய படங்களிலேயே நடித்து வருகிறார். “என் உடல், என் உரிமை.. என் நிர்வாணம் எனக்குப் பிடித்தால் நான் எப்படியும் நடிப்பேன்…” என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதை முன் வைத்துதான் இப்போது டிவீட்டர்வாசிகள் “ராதிகா ஆப்தே போன்றவர்களால் இந்தியாவின் கலாச்சாரமும், பண்பாடும் அழிக்கப்படுகிறது. இதனால் ராதிகாவை நாம் புறக்கணிக்க வேண்டும். அவருடைய படங்களை நாம் பார்க்கக் கூடாது. சமூக வலைத்தளங்களில் அவரைத் தொடரக் கூடாது” என்றெல்லாம் பல வகை, வகையான நிபந்தனைகளுடன் ராதிகா ஆப்தே மீதான எதிர்ப்புப் போராட்டம் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது.