மது கடை திறப்புக்கு எதிராக திரையுலகினர்

மதுவும் புகையும் தவிர்க்க முடியாத ஒன்றாக  அதிகம் பயன்படுத்தபடும்

திரைப்படத்துறையில் இருந்து தமிழகத்தில் மே 7 முதல் மதுவிற்பனை கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்கருத்துகள் எழ தொடங்கியுள்ளன
மது உபயோகப்படுத்துபவர்களுக்கு தமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரணங்கள் ரத்து செய்யப்பட வே ண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான JSK தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்
இதனை தொடர்ந்து திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார்.
“மது என்பது அரசுக்கு வரவு; அருந்துவோருக்கு செலவு,மனைவிக்கு சக்களத்தி,மானத்தின் சத்ரு, சந்தோஷக் குத்தகை, சாவின் ஒத்திகை, ஆனால் என்ன பண்ணும் என் தமிழ் மதுக்கடைகளின் நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது? என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு செய்வது தவறு நாடு முழுவதும் நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது கடையை திறக்க துணிகிறீர்கள். குடி, கொரோனா இரண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். தமிழக அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும்போது மூடிவிட்டு இப்போது அதிகமாகும்போது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகி விடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளாார்

இயக்குனர் வெங்கட் பிரபு

வட மாநிலங்களில் மதுபான கடைகள் முன்னால் ஏராளமானோர் திரண்டு மதுபானங்கள் வாங்கி குவித்த வீடியோவை பார்த்துவிட்டு வெளியிட்ட பதிவில் இந்த வீடியோக்களை பார்க்கும்போது, எல்லா மதுபான கடைகளும் இன்றுமுதல் கொரோனாவை பரிமாறப்போகிறது என்று உணர்கிறேன்.
நிறைய பேர் வாங்கி இருப்பு வைத்து விட்டதாக சொல்வார்கள். ஏழைகள் என்ன செய்வார்கள். எனக்கும் ஸ்டாக் தீர்ந்து பல நாள் ஆகிவிட்டது. பாதுகாப்பு முக்கியம் என்று கூறியுள்ளார்.