காக்கா முட்டை திரைப்படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குழலி.
முக்குழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை செரா.கலையரசன் இயக்கியிருக்கிறார்.
இதில் நாயகியாக நடிகை ஆரா நடிக்கிறார்.பிரபல இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும் தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள்.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஊர்வசி, இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார்,பேரரசு,ஜாக்கு
விழாவில் நடிகை ஊர்வசி பேசியதாவது….
பல வருடங்களாக எனது அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் நடக்கவில்லை. தற்போது அண்ணன் ஒரு படம் எடுத்திருக்கிறார் .அதை நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனந்த கண்ணீருடன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது….
இத்தனை வருடத்தில் நான் இயக்க முடியாமல் போன நடிகை ஊர்வசி மட்டும்தான் .இப்படி போன்றவர்கள் இங்கு வருகை தந்து இப்படத்தை வாழ்த்துகிறார்கள்,கண்டிப்பாக வெற்றி அடையும். படம் பிரமாதமாக வந்துள்ளது. இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் இயக்குனர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
பேரரசு பேசியதாவது…
கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போதுதான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஜாதியை ஒழிப்பதற்காக படம் வர வேண்டுமே தவிர அதை வளர்ப்பதற்கு கிடையாது. சமீப காலங்களில் வரும் சாதி பசங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படமாக குழலி அமைய வேண்டும். இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…..
காதலால் ஜாதி ஒழியும் என்பதைவிட கல்வியால் ஜாதி ஒழியும் என்பதை ஏற்க முடிகிறது .இந்த படத்தின் இயக்குனருக்கும்தயாரிப்பாளர்களு
படத்தின் இயக்குநர் செரா.கலையரசன் பேசியதாவது….
சமூக அக்கறை உள்ள படங்களை மட்டுமே இயக்க வந்துள்ளேன்.பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் படங்களை நான் எடுக்க வரவில்லை.அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை.
படத்தின் பாடல்கள் மிகவும் பிரமாதமாக உள்ளது இசை அமைப்பாளர் உதயகுமார் அவர்களுக்கு என் நன்றி.கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளரை தகப்பன் என்று தான் சொல்ல வேண்டும்.அவ்வளவு உதவிகளையும் சுதந்திரத்தையும் எனக்கு அளித்தார். இந்தப் படத்தை வெளியிடும் நண்பர் டிரைடன்ட்ஸ் ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி.
நாயகன் விக்னேஷ் பேசியதாவது…..
சில வருடங்களுக்கு முன்பு காக்கா முட்டை படத்திற்காக மேடை ஏறினேன். அதற்குப்பிறகு இப்படத்தில்தான் மேடை ஏறுகிறேன். இந்தப் படம் வெளியான பிறகு காக்காமுட்டை விக்கி என அழைப்பதற்குப் பதிலாக குழலி விக்கி என்று தான் அழைப்பார்கள் என நினைக்கிறேன். இயக்குனர் கலையரசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்துள்ளது.
இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் பேசியதாவது…..
இந்தப்பாடல் உருவாக்க் காரணமாக இருந்த அனைத்து இசைக் கலைஞர்களுக்கும்,கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது….
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப்படத்தில் மூன்று காதல் பாடல்கள் எழுதியிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் காதல் மிக அவசியம். காதலித்தால் சாதி போகும் காதலித்தால் மதம் போகும் ஆகவே காதலைப் போற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.