தமிழ் சினிமாவில் கடந்த இருவாரங்களாக கேபிள் TVயில்
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி. செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன், உட்லண்ட்ஸ் வெங்கடேஷன், திருச்சி மீனாட்சிசுந்தரம், திருச்சி ஸ்ரீதர்
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தரப்பில் சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் மன்னன் ஆகியோர் பங்கேற்றனர்
நமக்குள் தொழில்ரீதியாக கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் முத்தரப்பும் இணைந்து நமது தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு தமிழக அரசிடம் முறையிட வேண்டும் என விவாதத்தை தொடங்கிவைத்த திருப்பூர் சுப்பிரமணி தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டால் மட்டுமே சினிமாவில் பிற வேலைகளை தொடங்க உதவிகரமாயிருக்கும் என கூறியுள்ளார்
இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்நாள் கனவான தமிழ் திரைப்பட வர்த்தக சபை மீண்டும் செயல்பட அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதை பிரதானமாக வலியுறுத்தியுள்ளார்
தயாரிப்பாளர்கள் தரப்பில்படப்பிடிப்பை மீண்டும்தொடங்குவதற்கு அரசிடம் அழுத்தம் கொடுத்து அனுமதி
திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது மத்திய அரசின் அதிகாரவரம்பிற்குட்பட்டது மாநில அரசிடம் மகஜர் கொடுப்பதால் எந்த பலனும் இல்லை என்பதுடன் திரையரங்க உரிமையாளர்கள் கடந்த நான்கு வருடங்களாக மாநிலஅரசிடம் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்கிற
ஆலோசனை கூட்டத்திற்கு பின் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதை தன் சங்க உறுப்பினர்களுக்கு ஆடியோ பதிவின் மூலம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்கள் தரப்பில் கலந்துகொண்டவர்கள் அதுபோன்று ஏன் வெளியிடவில்லை என்கிற விவாதம் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது