ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடிதான். ஆனால் 32 கோடி ரூபாய் என்று பொய் சொன்னதாக அப்படத்தின் இயக்குநர் 11 வருடங்கள் கழித்து செல்வராகவன் அறிவித்துள்ளார். இதன்மூலம் வரவு-செலவு தகவல்களில் கோடம்பாக்க சினிமாவில் நாணயமும் நேர்மையும் இல்லை என்பதை பகிரப்படுத்தியிருக்கிறார் அந்த குற்றத்தை செய்தவர்களில் தானும் ஒருவன் என்பதை தயக்கம் இன்றி ஒப்புக்கொண்டிருக்கிறார்
ஏற்கெனவே சினிமாக்காரர்கள் பில்டப்பில்தான் வாழ்க்கையை ஓட்டி வருவதாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலைமையில் 11 வருடங்கள் கடந்த பின் தற்போது படத்தின் பட்ஜெட் பற்றிய உண்மையை கூறியிருப்பது தயாரிப்பாளர்கள் பலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது