கொரோனா ஊரடங்கினால் சினிமா உலகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அதன் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
படத்திற்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலும் உள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகும் திரையரங்குகளில் படம் பார்க்க கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தளர்வுகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இறுதியாக, திரையரங்கம் திறப்பதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. நாளை இன்றுமுதல்(23.08.2021) 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திரையரங்குகள் இயங்கும்.
பின்னர், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில், திரையரங்குகளுக்கு மக்கள் அச்சமின்றி வருவார்களா எனும் கேள்வி எழுகிறது. அதோடு, சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூட்டம் வருமா என்கிற ஐயம் திரைத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது
2020ம்ஆண்டு சுமார் 9 மாதங்கள் திரையரங்குகள் மூடியே கிடந்தன. நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கை அனுமதியுடன்தியேட்டர்கள்
இந்த நிலையில் அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி கிராமத்து கதையில் ஆக்க்ஷன், சென்டிமெண்ட், காமெடி கலந்த குடும்ப படத்தில் நடிப்பதால் அவரதுரசிகர்கள்மத்தியில் படத்திற்குஎதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் தயாராகும் என தெரிகிறது.
தமிழ் படம் இல்லையென்றாலும், தமிழ் படத்துக்கு இணையான வரவேற்பு ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்கு இந்தியா முழுவதும் நிலவுகிறது பாகுபலி எனும் படத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். அலியா பட், அஜய்தேவ்கன் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
சிறப்பான நெட்வொர்க் வசதி, டிஜிட்டல் இணைப்பு, ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்படும் என, ஆர்.பி.எஸ்.ஏ., அட்வைசர்ஸ் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓ.டி.டி., சந்தை, எதிர்வரும் வருடங்களில் இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும்.
விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், சசிகுமார், அருண் விஜய் ஆகியோர் நடித்து இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.
சிம்பு நடித்து தயாராக உள்ள ‘மாநாடு’, ஆர்யா நடித்து முடித்துள்ள ‘அரண்மனை-3 விஷால், ஆர்யா நடிக்கும் ‘எனிமி’, விஷ்ணு விஷால் நடிக்கும் ‘எப்ஐஆர்’, கங்கனா ரணவத் நடித்துள்ள ‘தலைவி’ ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படங்களாக இருக்கின்றன.