துள்ளலான இளைஞராக அறிமுகமாகி பேய்வீட்டுக்கு குடிபோனதும் பயத்தில் உறைந்து அதிர்ச்சியில் உறைந்து போய் மரணத்தைச் சந்திக்கிற வேடமேற்றிருக்கிறார் அறிமுக நாயகன் அஜய்கார்த்திக்.ஜாலியாக தொடங்கி படிப்படியாக அச்சத்தில் உறையும் கதாபாத்திரத்துக்கு முழுநியாயம்செய்திருக்கிறார்.
அஞ்சனா நேத்ரனுக்கு அதிக வேலையில்லை என்றாலும் நிறைவாக இருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக முக்கிய வேடமேற்றிருக்கும் நட்டி,கதையின் மையப்புள்ளியாக தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதற்கேற்ற பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வீட்டு உரிமையாளராக நடித்திருக்கிறார் அண்மையில் மறைந்த கே.பாக்யராஜ்.அவருடைய திரைஇருப்பு படத்துக்குப் பலம்.
சிபி சக்கரவர்த்தி,விடிவி கணேஷ்,அரவிந்த்,சாகுல்,நரேன் ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ரவி சக்தி ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் மனநடுக்கங்கள் காட்சிகளிலும் எதிரொலித்து பயமேற்றியிருக்கிறது.
மனு ரமேசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.பின்னணி இசையில் திகிலுக்கு திகிலூட்டியிருக்கிறார்.
படத்தொகுப்பு செய்திருக்கும் கதிரேஷ் அழகேசன் முதல்பாதியை கனகச்சிதமாகச் செய்துவிட்டார்.ஒப்பீட்டளவில் இரண்டாம்பாதி பலவீனமாக இருக்கிறது.
கலைஇயக்குநர் சண்முகராஜா,சண்டைப்பயிற்சி இயக்குநர் நைஃப் நரேன்,நடனஇயக்குநர் சதீஷ் ஆகியோர் நாயகன் அஜய்கார்த்திக்குக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.
இயக்குநர் கணேஷ் கே.பாபு கதை எழுதியுள்ளார்.ஒரு சின்னப் புள்ளியை வைத்து பெரிய கோலம் போடும் கலை அவருக்குக் கைவந்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் கல்யாண் கே.ஜெகன்இயக்கியிருக்கிறார்.