தமிழ் சினிமாவில் 28 ஆண்டுகளில் 61 படங்களில் கதாநாயன் இவற்றில் 50% படங்கள் வெற்றி பெற்று கல்லாவை நிரப்பியது இந்த அசாத்தியத்தை நிகழ்த்திய நடிகர் விஜய் 46வது பிறந்த நாள் இன்று,



தந்தை எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வெற்றி(1984) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் செந்தூரப்பாண்டி, ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை என மசாலாபடங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் வணிக ரீதியாகபலம் பெறாத நடிகராகவே வலம் வந்துள்ளார் விஜய்.



விஜய்யின் திரைவாழ்க்கைமுழுக்கவே ஒரு பொதுவான அம்சத்தை காணலாம். இயக்குநருக்கான சினிமா ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் முழுக்க முழுக்க தன் ரசிகர்களை மனதில் வைக்கும் ஒரு படம். அதன் பின்னர் வந்த பிரண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான், பகவதி, வசீகரா என கலவையான படங்களில் நடித்துவந்த விஜய் ஆக்க்ஷன் ஹீரோவாகவும், இன்னும் சொல்லப்போனால் பக்கா மசாலா ஹீரோவாக மாறிய படம் ரமணா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான திருமலை.




எல்லாகாலகட்டத்திலும் விஜய்யால் மட்டும் எப்படி தன் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது? இதற்கு முக்கியமான காரணம், சமகாலத்தன்மையோடு பயணிக்கும் இயக்குநர்களோடு பயணிப்பதே. ஒரே மாதிரியான படங்களில் நடிப்பது,
வரவிருக்கும் மாஸ்டர், அடுத்தடுத்த படங்களுக்கான பேச்சுவார்த்தைகளைப் பற்றிய செய்திகள் விஜய் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இயக்குநர்களின் படம், ரசிகர்களுக்கான பக்கா மாஸ் படம் என பயணித்து வந்த விஜய், சமீப வருடங்களில் இந்த இடைவெளியை இணைத்து வருவது கவனிக்கத்தக்கது. இது நிச்சயம் ரசிகர்களுக்கும், திரைத்துறைக்கும், விஜய்க்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துவோம்!!