‘சின்ன வயசுல எனக்குத் தெரிஞ்ச டெக்னாலஜின்னா, அது மேல போற ஃபிளைட்டும், தியேட்டர்ல ஓடுற படமும் தான். அப்ப ரஜினி சார் படங்கள் தான் அதிகமா ஓடும். நான், ரஜினி சார் அந்த தியேட்டர்லயே தங்கியிருக்காருன்னு நினைச்சேன்.
டிசம்பர் 7ஆம் தேதி மாலை 6 மணியளவில் தொடங்கிய தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரவு 11 மணி வரையிலும் நடைபெற்றது.
தர்பார் திரைப்படத்தில் நடித்துள்ள, அந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் விழாவில் கலந்துகொண்டு பேசினாலும், சிலர் பேசியது மட்டும் மிக முக்கிய கவனம் பெற்றது. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், விவேக் மற்றும் இயக்குநர்கள் ஷங்கர், முருகதாஸ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
“15 நாட்களுக்கு முன்னால் சுபாஷ்கரன் ஃபோன் செய்தார். நீங்க இரண்டு நாட்கள் லண்டனுக்கு வரவேண்டும். லண்டனிலிருந்து 78 கிலோமீட்டரிலுள்ள நகரத்தில் ஒரு பார்க் இருக்கிறது.
ரொம்ப ஜனரஞ்சகமா ஒரு கதையை எழுதியிருக்கார் முருகதாஸ். நான் 160 படங்களுக்கும் மேல பண்ணியிருந்தாலும் இந்தப் படம் மாதிரி ஒரு திரில்லர், சஸ்பென்ஸ் படம் நான் பண்ணதில்லை.” என்று தர்பார் கதை தன்னிடம் வந்த கதை குறித்து கூறினார்.
இந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது. இதுபோன்ற விழாக்களுக்கெல்லாம் அதிகமாகக் கொடுப்பதில்லை. நான் இந்த அரசாங்கத்தின் மீது பல விமர்சனங்களை வைத்திருக்கிறேன். அது எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் இந்த இடத்தைக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியவர்,
“நான் முதல் முதல்ல தமிழ்நாட்டு மண்ணுல கால் வெச்ச சம்பவத்தை சொல்றேன். நான் எஸ்.எஸ்.எல்.சி வேற மொழியில் படிச்சிட்டு, அடுத்ததா இங்கிலீஷ் மீடியத்துல போட்டதும் ரொம்ப கஷ்டப்பட்டேன்.