அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராக தவறினால் கைது ‘வாரன்ட்’ பிறப்பிக்கப்படும்’ என, ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இங்கு, நடிகை கங்கணா ரணாவத் மீது, ‘டிவி’ பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாக கூறியதாக, திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் , கங்கணா மீதான அவதுாறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கணாவின் ரணாவத் வழக்கறிஞர் திரைப்பட விளம்பரத்திற்காக கங்கணா சென்ற போது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கணா ரணாவத் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றஞ்சாட்டினார்.