சுபாஸ்கரன் பயோ பிக் – இயக்க விரும்பிய மணிரத்னம் – முருகதாஸ்

லைகா தயாரித்துள்ள தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பொங்கலுக்கு படம் ரிலீஸ் என தடபுடலாக அனைத்தும் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை பத்திரிகையாளார்களுடன் பகிர்ந்துகொண்டார் சுபாஷ்கரன்.

தர்பார் திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்ட இந்த பத்திரிகையாளார்கள் சந்திப்பில் சுபாஷ்கரன் ‘நான் 100% தமிழன் தான்’ என்று குறிப்பிட்டு பேசினார்.

கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் லைகா கால் வைத்ததிலிருந்தே சுபாஷ்கரன் மீது, அவர் தமிழர்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இதுபற்றி கேட்டபோதே, நான் தமிழன் தான் என்று அவர் குறிப்பிட நேர்ந்தது.

மேலும், சுபாஷ்கரனைப் பாராட்டிப் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் “சுபாஷ்கரன் வாழ்க்கையையே ஒரு திரைப்படமாக எடுக்கவேண்டும். அந்தளவுக்கு சுவாரசியங்களும், விடாமுயற்சியும் நிறைந்தது அவர் வாழ்க்கை.

தனி ஆளாகக் கிளம்பிவந்து இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை வளர்த்திருக்கிறார் என்றால் அது சாதாரணமான நிகழ்வல்ல” என்று கூறினார். முருகதாஸ் கூறியதையே வரவேற்றுப் பேசிய இயக்குநர் மணிரத்னம் ‘அவர் வாழ்க்கையைப் பார்த்து நான்கூட வியந்திருக்கிறேன். அவர் கதையை பயோபிக்காக எடுக்கலாம்” என்று கூறினார்.