இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம்

சந்தானம் இப்போது ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ்ஜெயராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அப்படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்படத்துக்கு சபாபதி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
திருச்சி,கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரேகட்டமாக நடந்து முடிவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
அது முடிவடைந்தவுடன் உடனடியாக ஒருபுதுப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அப்படத்தை இயக்கவிருப்பது ஆர்.கண்ணன்.
இவர்கள் இருவரும் இணைந்த பிஸ்கோத் படம் நவம்பர் 14 அன்று வெளியானது.
அதற்கடுத்து உடனடியாக மீண்டும் அவர்கள் இணைந்து ஒரு படம் உருவாக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.