கொரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது இதன் காரணமாகசினிமா படப்பிடிப்புகள், திரையரங்கு தொழில்களும் முடங்கியுள்ளன இந்த நிலையில் கடந்த மாதம் தெலுங்கு, தமிழ் திரைப்பட துறையில் படப்பிடிப்பு, போஸ்ட் புரடெக்க்ஷன் வேலைகளை தொடங்க அனுமதி கேட்டனர்
தெலுங்குடிவி தொடர் படப்பிடிப்புகள் ஆரம்பமான நிலையில் அதில் நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக டிவி தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
கொரோனா தொற்று அச்சத்தால் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முன்னணி நடிகர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. தெலுங்கு திரையுலகத்தின் தற்போதைய பிரம்மாண்ட பட்ஜெட் படமான ராஜமவுலி இயக்கும்ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.